Home செய்திகள் திருமங்கலம் அருகே தனியார் வங்கியில் கடனை செலுத்த முடியாத விவசாயி குடும்பத்தின் கதவை பூட்டி , சீல் வைப்பு.குழந்தைகள் , பெற்றோர் உடுத்த உடையின்றியும், படிக்க புத்தகம் இன்றி வீதியில் தவிப்பு

திருமங்கலம் அருகே தனியார் வங்கியில் கடனை செலுத்த முடியாத விவசாயி குடும்பத்தின் கதவை பூட்டி , சீல் வைப்பு.குழந்தைகள் , பெற்றோர் உடுத்த உடையின்றியும், படிக்க புத்தகம் இன்றி வீதியில் தவிப்பு

by mohan

திருமங்கலம் அருகே தனியார் வங்கியில்பெற்ற கடனை , கடந்த ஓராண்டு காலம் கொரோனா காலமாக இருந்ததால் , கடனை செலுத்த முடியாத விவசாயி குடும்பத்தின் வீட்டிலுள்ள பொருட்கள் அனைத்தையும் வைத்து நீதிமன்ற உத்தரவின்பேரில் கதவை பூட்டி , சீல் வைப்பு.(குழந்தைகள் மற்றும் பெற்றோர் உடுத்த உடையின்றியும், படிக்க புத்தகம் இன்றி வீதியில் தவிப்பு.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே விருசங்குளம் கிராமத்தில் உள்ள சதீஷ்குமார் – செல்வி தம்பதியினருக்கு சௌந்தர்யா (17)வித்யா என்ற இரு மகள்கள் உண்டு.கடந்த 2018 ஆம் ஆண்டு தனியார் (idfc)வங்கியில் ரூபாய் 4.5 லட்சம் கடனுதவி பெற்ற சதீஷ்குமார் , அத்தொகையை வைத்து 7 பசு மாடுகள் வாங்கி தொழில் செய்த நிலையில் ,கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக கொரோ காலம் வந்ததால், தவணை தொகையை கட்ட முடியாமல் தவித்த சதீஷ்குமாருக்கு , அந்த தனியார் வங்கியில் இருந்து வழக்கறிஞர்கள் மூலமாக சதீஷ்குமார் வீட்டுக்கு வந்து அவர் இல்லாத நேரத்தில் வீட்டை பூட்டி சீல் வைத்து சென்றதால் , அவருடைய ஆடைகள் மற்றும் குழந்தைகளின் படிப்பிற்கான புத்தகங்களை எதனையும் எடுக்க முடியாமல் வீதியில் தள்ளப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து பலமுறை தனியார் வங்கி நிர்வாகத்திடமும் , காவல்துறையிடமும் முறையிட்டும் எந்த பலனும் ஏற்படாத காரணத்தால் , வீதியில் தள்ளப்பட்டது சதீஷ்குமாரின் குடும்பம் தற்போது திக்குத் தெரியாமல் திணறி வருகிறது .இது குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து விவசாயி சதீஷ்குமாரின் குடும்பத்தை காக்க வேண்டும் என வேதனையுடன் தெரிவித்தார் .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!