4
திண்டுக்கல் மாவட்டம், சிலுக்குவார்பட்டி விவேகானந்தர் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.தேன்மொழி சேகர் தலைமை தாங்கி மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் யாகப்பன், அம்மையநாயக்கனூர் முன்னாள் பேரூராட்சி தலைவர் தண்டபாணி, நிலக்கோட்டை பேரூராட்சி முன்னாள் தலைவர் சேகர், ஒன்றிய அவைத்தலைவர் கிழக்கு தவமணி, ஊராட்சி மன்ற தலைவர்கள் செல்விஜெயசீலன், செல்வராஜ், பள்ளி தலைமையாசிரியர் சுந்தரவடிவேல், அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ரேவதி தங்கபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.