Home செய்திகள் தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டிடம்

தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டிடம்

by mohan

மதுரை மாவட்டம் திருமங்கலம் தீயணைப்பு நிலையம் பல வருடங்களாக வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வந்தது. அமைச்சர் உதயகுமார் முயற்சியில் ரூ. 98 லட்சம் மதிப்பீட்டில் 2 வாகனங்கள் நிறுத்தும் வசதியுடன், காவலர் ஓய்வு அறையுடன் புதிய கட்டிடம் விருதுநகர் ரோட்டில் ராஜபாளையம் பிரிவில் கட்டப்பட்டது.இதை முதல்வர் பழனிச்சாமி நேற்று காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் பாண்டி, நிலைய அலுவலர் ஜெயராணி, டி.கல்லுப்பட்டி நிலைய அலுவலர் பெருமாள் குத்துவிளக்கேற்றினர். காவலர்களுக்கு பொன்னாடை போர்த்தப்பட்டு விருந்து வழங்கப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!