மழை மாவட்டம் அவனியாபுரம் பைபாஸ் சாலையில் உள்ள ஆதிதிராவிடர் சமூகத்திற்கு பாத்தியப்பட்ட மயானம் அமைந்துள்ளது.இம் மயானம் ஐம்பது வருடத்திற்கு முன்பு ஆதிதிராவிடர் சமூகத்தினருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாற்று சமுகத்தை சேர்ந்தவர்கள் மயானத்தை பகுதியை ஆக்கிரமித்து உள்ளனர்.இதனை கண்டித்து வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.இந்நிலையில் அபகரிப்பு செய்த மாற்று சமூகத்தினரை கண்டித்தும் மயானத்தை மீண்டும் திரும்பப் பெறக் கோரியும் சிறுத்தைகள் கட்சியின் சார்பாகவும் ஆதி திராவிட கட்சியின் சார்பாகவும் தெற்கு மாவட்ட செயலாளர் இன்குலாப் தலைமையில் 30 மேம்பாட்டு மையம் மாவட்ட அமைப்பாளர் அவனி முனியசாமி, வளவன் உள்ளிட்ட பலர்கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.