8
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முக அழகிரியின் ஆதரவாளர் இல்ல திருமண விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் திமுக தலைவர் மறைந்த கருணாநிதியின் மகன் முக அழகிரி கலந்துகொண்டு சீமானூத்து ஊராட்சிமன்ற மன்ற தலைவர் அஜித்பண்டி முன்னிலையில் மாங்கல்யம் எடுத்துக்கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். திருமண விழாவில் பங்கேற்பதற்காக வந்த முக அழகிரிக்கு அவரது ஆதரவாளர்கள் திரளாக கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். மு க அழகிரி அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பு திமுக அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உசிலை சிந்தனியா
You must be logged in to post a comment.