Home செய்திகள் மதுரையில் காவல் ஆய்வாளர் மீது காரை ஏற்றி கொலை முயற்சி.

மதுரையில் காவல் ஆய்வாளர் மீது காரை ஏற்றி கொலை முயற்சி.

by mohan

மதுரை: வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல் ஆய்வாளர் மீது கார் ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளராக நந்தகுமார் பணியாற்றுகிறார். இவர் இரவு பிடிஆர் பாலம் அருகே வாகன தணிக்கை சோதனையில் ஈடுபட்டிருந்தார்.அப்போது ஒரு ஆடம்பர கார் மிகவும் வேகமாக வந்தது. நந்தகுமார் அந்த காரை நிறுத்தும்படி சிக்னல் செய்தார். ஆனால் அந்த கார் நிற்காமல் வேகமாக வந்து நந்தகுமார் மீது மின்னல் வேகத்தில் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் அவருக்கு தலை, கால் மற்றும் முழங்கை ஆகியவற்றில் பலத்த காயம் ஏற்பட்டது.எனவே அவரை சக காவலர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுதொடர்பாக நந்தகுமார் தெப்பக்குளம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.இதன் பேரில் வழக்குப்பதிவு செய்து நந்தகுமார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரின் நம்பரை கண்டுபிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாநகர போலீஸ் இன்ஸ்பெக்டரை கார் ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!