Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரையில் கல்யாண ராமன் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை பல் வேறு சமூக அமைப்புகள் முதல்வர் மற்றும் தலைமை காவல்துறை அதிகாரிக்கு மனு..

கீழக்கரையில் கல்யாண ராமன் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை பல் வேறு சமூக அமைப்புகள் முதல்வர் மற்றும் தலைமை காவல்துறை அதிகாரிக்கு மனு..

by ஆசிரியர்

கீழக்கரையில் பல் வேறு சமூக அமைப்புகள் மக்கள் நல பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மக்கள் நல பாதுகாப்புக்கழகம், சட்ட விழிப்புணர்வு இயக்கம், இஸ்லாமிய கல்வி சங்கம், மஜ்ம-உல்-ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை, வடக்கு தெரு சமூக நல தர்ம அறக்கட்டளை, கீழக்கரை நகர் நல இயக்கம் மற்றும் கீழக்கரை பொதுமக்கள் சார்பாக தமிழக முதல்வர், தமிழக காவல்துறை தலைவர் ஆகியோருக்கு அனுப்பி உள்ள மனு அனுப்பப்பட்டுள்ளது. அம்மனுவில்,

அமைதி பூங்காவான தமிழகத்தில் இஸ்லாமியர்களும் இந்து சமூக மக்களும் அண்ணன் தம்பிகளாக, மாமன் மச்சான்களாக சகோதரப் பாசத்துடன் பழகி வருகிறோம். இந்நிலையில் கடந்த 31.01.2021 அன்று கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பாரதீய ஜனதா கட்சி கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் எனும் நபர், இஸ்லாமியனான நான், உயிரினும் மேலாக மதிக்கும் இறைத்தூதர் முஹம்மது நபி அவர்களை மிக கேவலமான வார்த்தைகளால் அவதூறாகவும் தரக்குறைவாகவும் விமர்சித்துள்ளார். இந்து முஸ்லிம் மக்களுக்கிடையே கலவரத்தை தூண்டி விடும் விதமாக இருக்கும் இந்த நபரின் பேச்சு இஸ்லாமிய மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நபர், சமூக நல்லிணக்கத்தையும் தமிழக மக்களின் நிம்மதியையும் சட்டம் ஒழுங்கையும் சீர் குலைக்கும் விதமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஆகவே சமூகம் உடனடியாக சம்பந்தப்பட்ட நபர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம், குண்டர் தடுப்புச் சட்டம், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் உள்ளிட்டவற்றிலும் தாமதிக்கால் உடனடியாக வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!