Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரை அருகே கோபத்தில் மாமியாரை குத்திக் கொன்ற மருமகன் கைது….

கீழக்கரை அருகே கோபத்தில் மாமியாரை குத்திக் கொன்ற மருமகன் கைது….

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே இடிஞ்சகல் புதூரைச் சேர்ந்தவர் பஞ்சப்பன். இவரது மனைவி பொன்னம்மாள், 60. இவரது மருமகன் முருகன், 40. மாமியார், மருமகன் இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் இவர்களுக்குள் நேற்றிரவு (05/02/2021) தகராறு மீண்டும் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த முருகன் பொன்னம்மாளை கத்தியால் குத்திக்கொலை செய்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கீழக்கரை போலீசார் பொன்னம்மாள உடலை கைப்பற்றி,கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இது தொடர்பாக முருகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!