Home செய்திகள் மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் கைது

மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் கைது

by mohan

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், மதுரை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு, மதுரை ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற போது நுழைவு வாயிற் கதவுகள் அடைக்கப்பட்ட தால் ஊழியர்களுக்கும், காவல்துறையினருக்கும் லேசான தள்ளு முள்ளு நடைபெற்றது . பின்னர் நுழைவு வாயில் முன் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் தொடர்ந்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஈடுபட்டனர். .இப்போராட்டத்தில் ஒரு பெண் ஊழியர் மயங்கி விழுந்தார் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து ஊழியர்களும் கைது செய்யப்பட்டு போலீசார் வேனில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!