இளைஞர் தூக்கிட்டு தற்கொலை .

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.ராஜபாளையம் முகில் வண்ணம்பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து (30).இவர் தென்காசி சாலையில் பழக்கடை வைத்துள்ளார்.இவருக்கும் இவரது அத்தை மகள் குருசெல்வி(25)க்கும் திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகிறது. மாரிமுத்து வுக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.இந்நிலையில் குடும்பத்தகராறு காரணமாக கடந்த ஜன.25ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இவரது மனைவி குருசெல்வி மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி இறந்த விரக்தியில் இருந்த மாரிமுத்து அதே மின்விசிறியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெகு நேரமாக வெளியே வராத காரணத்தினால் அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் தூக்கில் தொங்கிய படி இருந்த மாரிமுத்துவின் உடலை போலீஸார் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து தெற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த மாரிமுத்துவுக்கு 7 வயதில் மகள் உள்ளது.

செய்தியாளர் வி காளமேகம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..