ஆரப்பாளையத்தில் டாஸ்மாக் பாருக்குள் புகுந்து சூறையாடிய ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். தத்தனேரி அருள்தாஸ் புரத்தை சேர்ந்தவர் விஜயபாபு 36 .இவர்ஆரபாளையம் ஏ.ஏ.ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார். ஏற்கனவே அங்கிருந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் குடிபோதையில் விஜயபாபுவுடன் உடன் தகராறு செய்தனர்.அவர்கள் அங்கிருந்த பீர் பாட்டிலை உடைத்து அவரை தாக்கி விட்டு அங்கிருந்த மேஜை நாற்காலிகளை சூறையாடி விட்டு ஓடி விட்டனர் .இந்த சம்பவம் தொடர்பாக விஜயபாபு கரிமேடுபோலீசில்போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பாரில் மேஜைநாற்காலிகளை சூறையாடிய ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.