கீழக்கரை அண்ணாநகர் முதல் தெரு கள்ளர்குல பண்ணையார் உறவின்முறை இளைஞர் சங்கம் சார்பில் பொங்கல் விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் ஹசனுதீன், முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் ஜெயினுதீன், வீரகுல தமிழர் படை ஒருங்கிணைப்பாளர் கீழை பிரபாகரன், வீரகுல தமிழர் படை செயலாளர் பழனி முருகன் உட்பட ஏராளமான முக்கியஸ்தர்கள் கலந்துகொன்டு பரிசுகளை வழங்கினர்.
இளைஞர் சங்கம் தலைவர் சரத்குமார், செயலாளர் மதுகணேஷ் வரவேற்றார், இளைஞர் சங்க பொருளாளர் காளீஸ்வரன் நன்றியுரை வழங்கினார் மற்றும் உறவின்முறை தலைவர் சூரசங்கர், செயலாளர் முருகன், பொருளாளர் பாண்டி ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.இளைஞர் சங்க பொறுப்பாளர்கள் அஜித்குமார், ராஜா, திருமுருகன், வேலவன், சந்துரு ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்
You must be logged in to post a comment.