மேலூரில் பைக்கில் வைத்திருந்த 5 லட்சம் திருட்டுமர்ம ஆசாமிக்கு வலைவீச்சு.

மதுரை மாவட்டம் மேலூரில் பைக்கில் வைத்திருந்த ரூபாய் ஐந்து லட்சத்தை திருடிய மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.மேலூர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் சித்தி ராஜன் 54 .இவர் நேற்று முன்தினம் வங்கியில் ரூ 5 லட்சம் பணத்தை எடுத்து தனது பைக்கில் வைத்திருந்தார்.பின்னர் யூனியன் அலுவலகம் முன்பாக பைக்கைநிறுத்திவிட்டுஅங்கிருந்து டீ குடிக்க சென்றுவிட்டார்.பின்னர் வந்து பார்த்தபோது பைக்கில்வைத்திருந்த ரூபாய் ஐந்து லட்சத்தை மர்ம நபர் திருடிச் சென்று விட்டார் .இந்த திருட்டு தொடர்பாக சித்தி ராஜன் மேலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விட்டு ஆசாமியை தேடி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..