பெற்றோர் பைக் வாங்கி தர மறுத்ததால் மனமுடைந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை.

மதுரை மானகிரி செல்லத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா முகமது மகன் ஹக்கிம்22 .இவர் கடந்த ஒரு மாதமாக புது பைக் வாங்கி தரும்படி பெற்றோரிடம் கேட்டு வந்தார். அதற்கு அவர்கள் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் , மனமுடைந்த ஹக்கீம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவருடைய அம்மா ஜரீனா பேகம் கொடுத்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம் .

புனித ரமலான் வாழ்த்துக்கள்..