7
தமிழக கல்வித்துறையின் ஆணைக்கிணங்க ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியில் ஏராளமான பெற்றோர்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்றனர்.
பள்ளி தாளாளர் எம்.எம்.கே. முஹைதீன் இப்ராஹிம் வழிகாட்டுதலில், பள்ளி முதல்வர் திருமதி மேபல் ஜஸ்டஸ் மற்றும் உதவி தலைமை ஆசிரியை திருமதி லினிமோல் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
இக்கருத்து கேட்பு கூட்டத்தில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகள் திறக்கலாம் என்று பெருவாரியான பெற்றோர்கள் கருத்து தெரிவித்தனர்.
You must be logged in to post a comment.