Home செய்திகள் எஸ்.டி.பி.ஐ கட்சி மதுரை ஸ்டேட் வங்கி முற்றுகையிட்டு போராட்டம் .

எஸ்.டி.பி.ஐ கட்சி மதுரை ஸ்டேட் வங்கி முற்றுகையிட்டு போராட்டம் .

by mohan

பெரும்பான்மை மமதையில் கார்ப்ப ரேட்டுகளுக்கு ஆதரவாக புதிய வேளாண் திருத்த சட்டத்தை இயற்றியுள்ள மத்திய பாஜக மோடி அரசு அச்சட்டங்களை ரத்து செய்ய கோரியும்!விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க மறுத்து வருவதோடு, தலைநகர் டெல்லியில் போராடும் விவசாயிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்து விவசாயிகளை கொச்சைப்படுத்தி வருகின்றது. விவசாய விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், எஸ்.டி.பி.ஐ கட்சி மதுரை மாவட்டம் சார்பில் ஜனவரி 5 செவ்வாய் காலை மதுரை ரயில் நிலையம் எதிரில் உள்ள ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் மாவட்ட தலைவர் முஜிபுர் ரகுமான் தலைமை வகித்தார்..போராட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் சாகுல் ஹமீது துணை தலைவர்கள் சீமான் சிக்கந்தர் சுப்பிரமணியன் செயலாளர் சிக்கந்தர் வர்த்தக அணி தலைவர் லத்தீப் தொகுதி நிர்வாகிகள் தாஜுதீன் பிலால் தீன் அபுதாகிர் ஆகியோர் கலந்துகொண்டனர்…மாவட்ட தொகுதி வார்டு கிளை நிர்வாகிகள் செயல் வீரர்கள் விமன் இந்திய மூவ் மெண்ட் நிர்வாகிகள் பெண்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷமிட்டனர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!