Home செய்திகள் மதுரையிலிருந்து வங்கதேசத்திற்கு ரயில்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்ட டிராக்டர்கள்.

மதுரையிலிருந்து வங்கதேசத்திற்கு ரயில்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்ட டிராக்டர்கள்.

by mohan

மதுரையிலிருந்து ரயில் மூலம் வங்கதேசத்திற்கு 25 சரக்கு பெட்டிகளில் 170க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் ஏற்றுமதி செய்து தென்னக ரயில்வேயின் மதுரைக் கோட்டம் சாதனை படைத்துள்ளதுமதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே அமைந்துள்ள டாஃபே நிறுவனம் விவசாயிகளுக்கு பயன்படும் டிராக்டர்களைத் தயாரித்து வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் டிராக்டர்கள் சாலை வழியாகவும், ரயில் மூலமாகவும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றனகடந்த 2019ஆம் ஆண்டு 12 சரக்கு ரயில்களில் வாடிப்பட்டியிலிருந்து டிராக்டர்கள் அனுப்பப்பட்டு 2 கோடியே 33 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டது. 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை 61 சரக்கு ரயில்களில் டிராக்டர்கள் அனுப்பப்பட்டு 11 கோடியே 78 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த 2019ஆம் ஆண்டைக் காட்டிலும் 80% அதிக வருமானமாகும்.மேலும் இந்த சாதனையில் முத்தாய்ப்பாக இன்று 25 சரக்கு பெட்டிகளில் 170 க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் ஏற்றப்பட்டு வங்காள தேசத்தில் உள்ள பேனாபோல் என்ற ரயில் நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது. மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் வி.ஆர்.லெனின் உத்தரவின் பேரில் கோட்ட வர்த்தக மேலாளர் டி.எல். கணேஷ் முதன்முறையாக வெளிநாட்டுக்கு அனுப்பப்படும் டிராக்டர்கள் ஏற்றும் பணிகளைத் துவக்கி வைத்தார்.தென்னக ரயில்வே அளவில் முதல்முறையாக வெளிநாட்டிலுள்ள ரயில் நிலையத்திற்கு இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் குறிப்பாக மதுரையில் தயாரிக்கப்பட்ட சாலை வாகனம் ரயில் மூலமாக அனுப்பப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இது குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!