ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலம் பேரூராட்சியில்உள்ள அரசு ஊரணி மற்றும் சந்துரு ஊரணி சுற்றி கருவேல மரங்கள் சூழ்ந்து உள்ளது. இதனால் மக்கள் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே அதனை அகற்ற வேண்டியும்.மேலும் அரசு ஊரணி மற்றும் சந்து ஊரணி ஆகியவற்றில் உள்ள பொது கழிப்பறை சுத்தம் இல்லாமலும் மற்றும் கழிவுநீர் தொட்டி நிறைந்து கழிப்பறையை மேலே வருகிறது. இதனால் மக்கள் உள்ளே செல்ல கஷ்டப்படுகின்றனர். எனவே அவற்றை சுத்தம் செய்து தர வேண்டியும்,ஊரணி சுற்றி உள்ள குப்பைகளை அரசு ஊரணி கரையில் கொண்டு வந்து மொத்தமாக உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் காற்றில் பறந்து ஊரணியில் விழுகிறது . இதனால் ஊரணி மாசு அடைகிறது . மேலும் குப்பைகளை அரசு ஊரணி கரையில் கொண்டு செல்ல துப்புரவு தொழிலாளர்களும் சிரமப்படுகின்றனர். எனவே குப்பையை அங்கு கொட்டாமல் வேறு அரசு இடத்தில் கொட்டி அள்ளுமாறு SDPI கட்சியின் சார்பாக ஆர்எஸ் மங்கலம் பேரூராட்சியில் மனு கொடுக்கப்பட்டது
4
You must be logged in to post a comment.