Home செய்திகள் பீகாரில் பாலியல் சீண்டலுக்கு ஆளாகி எரித்து கொலை செய்யப்பட்டகுல்நாஸ் காத்தூனுக்குநீதி வழங்கு!

பீகாரில் பாலியல் சீண்டலுக்கு ஆளாகி எரித்து கொலை செய்யப்பட்டகுல்நாஸ் காத்தூனுக்குநீதி வழங்கு!

by mohan

பீகாரில் பாலியல் சீண்டலுக்கு ஆளாகி எரித்து கொலை செய்யப்பட்ட குல்நாஸ் காத்தூனுக்கு நீதி வழங்கு!பாஜக கூட்டணி அரசே குற்றவாளிகளை பாதுகாக்காதே!குல்நாஸ் காத்தூனுக்கு நீதி வழங்கக் கோரி மதுரையில் தேசிய பெண்கள் அமைப்புவிமன் இந்தியா மூவ் மெண்ட்சார்பாக நவம்பர் 25 மாலை மதுரை நெல் பேட்டை அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவி கதிஜா பீவி தலைமையில் நடைபெற்றது..மாவட்ட செயலாளர் சமீமா பேகம் வரவேற்புரை நிகழ்த்தினார்….மாநில மாவட்ட தொகுதி கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்விமன் இந்தியா மூவ் மெண்ட் மாநில தலைவி நஜ்மா பேகம் சிறப்புரை ஆற்றினார்..விடுதலை சிறுத்தைகள் கட்சி தெற்கு தொகுதி செயலாளர் மோகனா. நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் மாவட்ட தலைவி சிராஜ் நிஷா.எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பேச்சாளர் பிலால் தீன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்..மாநில செயற்குழு உறுப்பினர் நஸ்ரத் பேகம். கேம்பஸ் ஃப்ரண்ட் நபிலா. ஆகியோர் கண்டன கோஷங்கள் முழங்கினார்கள்.இறுதியாக விமன் இந்தியா மூவ் மெண்ட் மதுரை மாவட்ட துணை தலைவி ஆபிதா பேகம் நன்றியுரை நிகழ்த்தினார்…மேலும் கூட்டமைப்பின் நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதுரை மாவட்ட நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அநீதிக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்..பீகார் மாநிலம் ரசூல்பூர் கிராமத்தில் குல்னாஸ் காத்தூன் என்ற 20 வயது சிறுமியை எரித்துக் கொன்ற சம்பவத்திற்கு நீதி வேண்டும்குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சதீஷ் ராயை திருமணம் செய்ய மறுத்ததால், தீ வைத்து கொளுத்தியதாக குல்நாஸ் பேசும் வீடியோ ஆதாரம் உள்ள போதும், 18 நாட்களாகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத பீகார் அரசின் மவுனமாக இருப்பது கண்டிக்கத்தக்கது என ஆர்ப்பாட்டத்தில் வழியுறுத்தபட்டது.

செய்தியாளர். வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!