திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இன்று காலை நிலத்தகராறு காரணமாக நடராஜன் என்பவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் பழனிச்சாமி மற்றும் சுப்ரமணி ஆகிய இருவரையும் சுட்டத்தில் இருவரும் படுகாயங்களுடன் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், இந்நிலையில் சுப்ரமணியனின் உடலில் குண்டு பாய்ந்திருந்த நிலையில் அதனை அகற்றுவதற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்துவரப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு குண்டை அறுவைசிகிச்சை மூலமாக அகற்றும் முயற்சிகளில் மருத்துவர்கள் ஈடுபட்டுவருகின்றனர், வயது மூப்பின் காரணமாக சுப்ரமணியனின் உடலில் இருந்து அதிக அளவிற்கு இரத்தபோக்கு இருப்பதால் உடலில் இருந்து குண்டை அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டதாகவும் குண்டுகள் அகற்றப்பட்டது இந்த நிலையில் அவசர சிகிச்சைகள் அனுமதிக்கப்பட்டிருந்த சுப்ரமணி சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.