இராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் பகுதியில் தங்கையின் வாழ்க்கைக்கு இடையூறாக இருந்த கள்ளக்காதலன் வெட்டி படு கொலை.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்தூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (27 வயது )இவரது தங்கை மயில் வயது 23 அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி (29 வயது) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணம் செய்து வாழ்க்கை நடத்தி வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ரவி (30 வயது) இருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது இதற்கிடையே செந்தில்குமார் மற்றும் அவர் குடும்பத்தினர் ரவியிடம் எச்சரித்து இதுபோல் பழக்கத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர் தங்கமயில் இடமும் எச்சரித்துள்ளனர் இதையடுத்து மனைவியுடன் ஏற்பட்ட கள்ள தொடர்பை துண்டித்து உள்ளார் ஆனால் ரவி மீண்டும் அந்தப் பெண்ணிடம் நெருங்கி பழக ஆரம்பித்து தொந்தரவு கொடுத்துள்ளார். அந்த பெண் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தொடர்ந்து பலமுறை பாலியல் தொந்தரவு அளித்து வந்ததாக இந்த தகவல் அந்த பெண்ணின் அண்ணன் செந்தில்குமாருக்கு தெரிந்துள்ளது.இதையடுத்து நேற்று செந்தில்குமார் கடை பகுதியில் நின்றிருந்த ரவி என்பவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து சேத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும் ராஜபாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் நாகசங்கர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தியதில் செந்தில் குமார் மற்றும் அவரது சகோதரர் செல்வம் ஆகியோரும் இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள தெரியவந்துள்ளது இதையடுத்து இருவர் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..