Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரை அரசு மருத்துவமனையில் உலக தரம் நாள் நிகழ்ச்சி…

கீழக்கரை அரசு மருத்துவமனையில் உலக தரம் நாள் நிகழ்ச்சி…

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அரசு மருத்துவமனை சார்பில் இன்று (12/11/2020) உலக தரம் நாள் விழா கொண்டாடப்பட்டது.

கீழக்கரை அரசு மருத்துவனையின் தலைமை மருத்துவர் ஜவாஹிர் உசேன் தலைமையில் டாக்டர் ராஜேஸ்வரன் டாக்டர் ஜெய துர்கா தேவி முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்புல்லானி ஒன்றிய வட்டார வள மருத்துவர் ராசிக்தீன் மருத்துவனையில் உள்ள சிறப்புஅம்சங்களை பற்றி விளக்கினார். மருத்துவமனையின் வளர்ச்சிக்கு உதவிய கீழக்கரையில் உள்ள பைத்துல்மால் டிரஸ்ட் மற்றும் தனியார் டிரஸ்ட் நிறுவனங்கள் பல செல்வந்தர்கள் கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு அதிகமாக நன்கொடை கொடுத்தும் பல உபயோகப்படும் பொருட்கள் கொடுத்து உதவி புரிந்ததை நினைவுபடுத்தி தலைமை மருத்துவர் ஜவாஹிர் உசேன் பெருமையுடன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் கீழக்கரையில் அரசு மருத்துவமனைக்கு உதவி செய்தவர்களுக்கும் கீழக்கரை அரசு மருத்துவமனையை தூய்மைப்படுத்த துரிதமாக நடவடிக்கை எடுக்கும் கீழக்கரை நகராட்சி சுகாதார ஆய்வாளர் பூபதி மற்றும் முன்னாள் கவுன்சிலர் சாகுல் ஹமீது கீழக்கரையில் சிறப்பாக செயல்படும் பத்திரிகையாளர்களுக்கும் மருத்துவர் ஜவாஹிர் உசேன் பரிசு வழங்கி கௌரவித்தார்.

பின்னர் அரசு மருத்துவமணையில் பிறந்த குழந்தைகளுக்கு மருத்துவர் ராஜேஸ்வரன் மற்றும் ஜெயதுர்காதேவி ஆகியோர்கள் பரிசை வழங்கினர் இவ்விழாவில் மருத்துவமனை செவிலியர்கள், ஊழியர்கள், கீழக்கரை நகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் மற்றும் கீழக்கரை பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கீழை நியூஸ் SKV முகம்மது சுஐபு

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!