துப்புரவு பணியாளர் 300 பேருக்கு புத்தாடை வழங்கி கெளரவித்த ஒன்றிய பெருந்தலைவர்

சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சத்திரப்பட்டி , மற்றும் சோழபுரம் பகுதியில் 300 துப்புரவு பணியாளர்களுக்கு புத்தாடை இனிப்புகள் வழங்கிய ஒன்றிய பெருந்தலைவர் சிங்கராஜ்விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சத்திரப்பட்டி பகுதியில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சத்திரபட்டியில் தீபாவளி திருநாளை முன்னிட்டு இராஜபாளையம் ஒன்றிய பெருந்தலைவர் சிங்கராஜ் 300 க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கி கௌரவித்தார் நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கச்சாமி செய்திருந்தார் விழாவில் மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் நவமணி, ஒன்றிய துணைத் தலைவர் துரை கற்பகராஜ் , ஒன்றிய துணை தலைவர் பாலவிநாயகம் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..