கீழக்கரை அருகே நாய் கடித்து புள்ளிமான் படுகாயம்..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அடுத்துள்ள தில்லையேந்தல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பள்ளமோர் குளம் பகுதியில் வெறி நாய் கடித்ததில் புள்ளி மான் படுகாயமடைந்தது.

பின்னர் கிராம மக்கள் மானை மீட்டு சிகிச்சைக்காக கீழக்கரை கால்நடை மருத்துவமனையில் அனுமதித்தனர். இதைப்பற்றி கீழக்கரை உட்கோட்ட வனசரக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கீழை நியூஸ் SKV முகம்மது சுஐபு

புனித ரமலான் வாழ்த்துக்கள்..