கனமழையிலும் சமூக சேவையில் களம் இறங்கிய வண்ணாங்குண்டு லஜ்னத்துல் இர்ஷாத் சங்க இளைஞர்கள்..

திருப்புல்லாணி அருகே வண்ணாங்குண்டில் நேற்று(05/11/2020) இரவு முதல் கனமழை பெய்ததால் மழை நீர் பெரிய ஊரணிக்கு செல்லும் வாய்க்கால்களில் ஆங்காங்கே தேங்கி நின்றது, தேங்கி நின்ற மழை நீரை பெரிய ஊரணிக்கு செல்வதற்கு கனமழை கூட பாராமல் மக்களின் நலனுக்காகவும் ஊரின் தேவைக்காவும் லஜ்னத்துல் இர்ஷாத் சங்கத்தின் சார்பாக மழைநீர் ஊரணிக்கு செல்வதற்கு வாய்க்கால்கள் சரி செய்தனர்.

கடந்த வருடங்கள் போலவே இந்த வருடமும் மழைநீர் வாய்க்கால் சரி செய்த லஜ்னத்துல் இர்சாத் இளைஞர் நற்பணி மன்றத்தின் சேவையை சுற்று வட்டார பொது மக்கள் பாரட்டினர்.

செய்தி வண்ணை SH Basith துபாய்..

புனித ரமலான் வாழ்த்துக்கள்..