சமுக ஒற்றுமையை வலுப்படுத்திய 7ஊர் அம்மன் சப்பரத் திருவிழா.பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த சப்பரங்கள்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டியை சுற்றி உள்ள ஏழு கிராமத்தினர் சமுக ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் சப்பர திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இன்று வரை 3 நாட்கள் நடைபெற்றது.6 ஊர் சப்பரங்கள் அம்மாபட்டியில் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தது பக்தர்களை பரவசப்படுத்தியது.இந்த திருவிழா முத்தாலம்மன் கோவில் திருவிழா என்று அழைக்கப்படுகிறது.திருவிழாவின் வரலாறு , சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திரா பெல்லாரி பகுதியில் இருந்து நவாப்புகளின் படையெடுப்பு காரணமாக ஒரு மூதாட்டி தனது ஆறு பெண்குழந்தைகளுடன் தெற்கு பகுதி நோக்கி வந்துள்ளார்.அவர்கள் டி.கல்லுப்பட்டியை வந்து அடைந்த போது பசியின் காரணமாக ஊர் தலைவர்கள் ராயர்,நாயக்கர்,ஆகியோர் அவர்களுக்கு உணவு அளித்து தங்க இடமும் கொடுத்துள்ளனர்.இந்த ஏழு பேரும் இப்பகுதிக்கு வந்த பின்னர்தான் டி.கல்லுப்பட்டியை சுற்றி நல்ல மழை பொழிந்து விவசாயம் செழித்து உள்ளது. பசி,பட்டினி பஞ்சம் நீங்கியது.இதனால் இப்பகுதி மக்கள் இவர்களை மிகவும் அன்போடு கவனித்து வந்தனர்.பின்னர் வளர்ந்த அந்த ஆறு பெண்களுக்கும் நாயக்கர் திருமணம் செய்து வைக்க முயன்றபோது,அப்பெண்கள் அதற்கு நாங்கள் தெய்வ குழைந்தைகள் என்றும் நாங்கள் மறையும் நேரம் வந்துவிட்டது என்றும் நாங்கள் தீயில் மடிந்தவுடன் எங்களது சாம்பலை எடுத்து கிராமங்களில் தூவினால் நோய்,நொடி மறையும் என்று கூறியுள்ளனர்.பின்னர் ஆதிபராசக்தியின் வடிவம் ஆகிவிடுவோம்.என்று கூறி அவர்கள் மறைந்து விட்டனர்.இந்த ஐதீகத்தின்படிதேவன்குறிச்சியில் ஆதிபராசக்தியாகவும்,டி.கல்லுப்பட்டியில்ரஸ்வதியாகவும்,வன்னிவேலாம்பட்டியில் மகாலட்சுமியாகவும்,அம்மாபட்டியில் பைரவியாகவும்,காடனேரியில் ரிபுரசுந்தரியாகவும்,கிளாங்குளத்தில் சபரியாகவும்,சத்திரப்பட்டியில் சவுபாக்கியவதியாகவும்,இக்கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர்.இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த முத்தாலம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது.இந்த திருவிழா சப்பர திருவிழாவாகவும் கொண்டாடப்படுகிறது.அம்மாபட்டியை தவிர பிற ஆறு கிராமங்களிலும் சப்பரங்கள் செய்யும் பணி நடை பெற்று வந்தது.ஒவ்வெரு கிராமத்தினரும் தங்கள் ஊர் சப்பரத்தை இரவும் பகலும் பாராது செய்து வந்தனர்..வண்ண,வண்ண காகிதங்கள்,மூங்கில் கொண்டு செய்தனர்..ஒவ்வெரு சப்பரமும் 33அடி முதல் 40அடி வரைஇருந்தது.கட்டப்பட்ட சப்பரத்தை திருவிழாவின் முக்கிய நாளான இன்று அந்தந்த கிராம மக்கள் தலை சுமையாகவே சுமார் 2 கிலோமீட்டர் அம்மாபட்டிக்கு சுமந்துகொண்டு வந்தனர். கிளாங்குளம்,சத்திரப்பட்டி,சப்பரங்கள் வயல் வெளியில் பக்தர்களால் சுமந்துகொண்டு வரப்பட்டது.அம்மாபட்டியில் பச்சை மண்ணால் வடிவமைக்கப்பட்ட ஏழு அம்மன்களும் ஒரே நேரத்தில் தோன்றி திரண்டு இருந்த பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.ஒவ்வெரு கிராமத்தினரும் தங்கள் ஊர் அம்மன்களை பெற்றுக்கொண்டு அவரவர் கிராமத்தினருக்கு திரும்பினர்.தொடர்ந்து சப்பரங்கள் தங்கள் கிராமத்திற்கு திரும்பியது.பல ஊர்களில் சப்பரங்கள்,மற்றும் தேர்களை,வடம் பிடித்து,அல்லது சக்கரங்கள் உதவிகொண்டு இழுத்து வருவார்கள்.ஆனால் இங்கு மட்டும் கிராம மக்கள் தங்கள் தலை சுமையாக தூக்கி வருவது சிறப்பாகும்.இந்த சப்பர திருவிழாவை பார்த்து,அம்மன்கள் அருள்பெற வேண்டி பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வருகை புரிந்தனர் பின்னர் மாவிளக்கு பூஜை,முளைப்பாரி,அம்மனுக்கு பூஜைகள் நடைபெற்றது..பல்வேறு சமுகத்தினர் ஒன்று கூடி தங்கள் ஒன்றுமையை திருவிழாவின் முலம் வெளிபடுத்தினார்கள்.விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பேரையூர் டி.எஸ்.பி. மதியழகன் தலைமையில் 350க்கும் மேற்பட்ட 350க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

உசிலை சிந்தனியா

புனித ரமலான் வாழ்த்துக்கள்..