விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே இரு பிரிவினர் சேர்ந்த நான்கு இளைஞர்கள் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து இருபிரிவினரும் கம்பு மற்றும் கல்லை வைத்து அடித்து கொண்டு கைகலப்பு ஏர்ப்பட்டதில் இருவருக்கு மண்டை உடைக்கப்பட்டு பலத்த காயங்களுடன் இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இரு பிரிவினர் மோதல் ஏற்பட்டதை அடுத்து இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே டிஎஸ்பி நாகஷங்கர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.காயமடைந்த ஒரு பிரிவினரை சேர்ந்தவர்கள் தங்களை தாக்கி அடித்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், இல்லையென்றால் நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.மேலும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவில்லை என்றால் எங்கள் பகுதி மக்களை திரட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர். காவல்துறையினர் சமாதானம் செய்து அவர்களை அனுப்பி வைத்துள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.