பின் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்நிகழ்ச்சியில் திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் வக்கீல் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்செய்தியாளருக்கு பேட்டி அளித்த மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கூறுகையில் மத்திய அரசு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தலைவர் உள்ளிட்ட உறுப்பினர் குழுவை நியமித்துள்ளதுமத்திய அரசின் நோக்கம் எய்ம்ஸ் மருத்துவமனையை பெரிய அளவில் உருவாக்கி மக்களுக்கு கொண்டு போய் சேர்ப்பதே.தமிழக அரசின் நோக்கம் எல்லாம் மாநில எய்ம்ஸ் மருத்துவமனையை மக்களிடம் சிறப்பாக கொண்டு போய் சேர்ப்பதற்காகவேஇதற்கு எதிர்க்கட்சிகள் பல்வேறு விதமான குற்றம்சாட்டி வருகின்றனர்எங்களைப் பொறுத்தவரைக்கும் இதில் நிச்சயமாக தகுதியான உறுப்பினர்களை தான் நியமித்து இருப்பார்கள் அதில் எந்த சந்தேகமும் எங்களுக்கு இல்லைமிக சிறப்பான அளவிலே எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதுஒவ்வொருவரையும் பற்றி ஆராயவேண்டியதில்லை எங்களுக்கு அவசியமில்லைஏனென்றால் மத்திய அரசு ஆராய்ந்து தான் ஜிப்மர் மருத்துவமனை உள்ளிட்ட தகுதியான உறுப்பினர்களை அமைத்துள்ளதுஎப்பொழுதுமே திருப்பரங்குன்றம் அதிமுகவின் கோட்டை தான்சூழ்நிலை காரணமாகத்தான் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தோம்இப்பொழுது நாங்கள் மிகத் தீவிரமாக பணியாற்றுகிறோம்தற்போது மக்கள் மத்தியில் தமிழக முதல்வர்க்கு தனிப்பெயர் நற்பெயர் கிடைத்திருக்கிறதுஇது நாங்கள் அமோக வெற்றி பெறுவோம் என்று கூறினார்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.