திருப்பத்தூர் அருகே தனியார்க்கு சொந்தமான ஹெலிகாப்டர் பனிமூட்டத்தின் காரணமாக தரையிறக்கம்.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த தாதன்குட்டை பகுதியில் கோயமுத்தூரிலிருந்து ஆந்திரா மாநிலம் திருப்பதி வரை தனியார்க்கு சொந்தமான ஹெலிகாப்டரில் 2பைலட் உட்பட 7நபர்கள் பயனம் செய்து உள்ளனர்.இந்த நிலையில் திருப்பத்தூர் பகுதியில் இரவு முழுவதும் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது.இதனையடுத்து காலைமுதல் வானம் கடும் பணிமூட்டத்துடன் காணப்படுவதால் முன்னெச்சரிக்கை நடைவடிக்காக தாதன்குட்டை என்ற பகுதியில் பைலட்கள் ஹெலிகாப்டரை பத்திரமாக தரை இறக்கி உள்ளனர்.இச்சம்பவம் அறிந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு குவிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..