6
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள நிலையூர் கிராமத்தில் கழிவுநீர் தொட்டியில் மாடு ஒன்று விழுந்து கிடப்பதாக மதுரை தீயணைப்பு துறைக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த நிலை அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான கழிவுநீர் தொட்டியில் சிக்கியிருந்த பசுமாட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி பசுமாட்டை மீட்டனர். பசுமாட்டை சோதித்து பார்த்தபோது அது ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. கழிவுநீர் தொட்டியில் மாடு விழுந்தது உயிர் இழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.