மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி மெயின் ரோட்டில் உள்ள முருகன் கோவில் அருகில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொருளாளர் வெற்றிவேல் மறைவிற்கு மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் கழக அமைப்புச் செயலாளருமான மகேந்திரன் தலைமையில் நகர தலைவர் குலசேகரபாண்டியன் முன்னிலையில் கழக நிர்வாகிகள் மறைந்த வெற்றிவேலின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து ஐந்து நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துப்பட்டது. இதில் வடக்கு ஒன்றிய செயலாளர் அபிமன்னன், தெற்கு ஒன்றிய செயலாளர் மலேசிய பாண்டி மற்றும் ஒன்றிய கவுன்சிலர் அலெக்ஸ் பாண்டி உள்ளிட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
உசிலை சிந்தனியா
You must be logged in to post a comment.