Home செய்திகள்கீழக்கரை செய்திகள் திருப்பரங்குன்றம் அருகே துவரிமான் பகுதியில் கள்ள காதல் தொடர்பாக வழக்கறிஞர் கொலை..

திருப்பரங்குன்றம் அருகே துவரிமான் பகுதியில் கள்ள காதல் தொடர்பாக வழக்கறிஞர் கொலை..

by ஆசிரியர்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா நாகமலைபுதுக்கோட்டை அருகிலுள்ள துவரிமான் இரட்டை வாய்க்கால் பகுதியில் நேற்று (09/10/2020) இரவு சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரின் உடல் கிடப்பது குறித்து நாகமலைபுதுக்கோட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இளைஞரின் உடலை மீட்டு போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியை சேர்ந்த அருணா ராஜேந்திரன் மகன் சாக்ரடீஸ் (எ) தேவா என்றும் மானாமதுரை மற்றும் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார் என்பதும் தெரியவந்துள்ளது சாக்ரடீஸ் மீது ஏற்கனவே மதுரை அவனியாபுரம் மற்றும் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையங்களில் கொலை வழக்கு உள்ளது.

இதுதொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வந்த சாக்ரடீசை சொக்கலிங்க நகரில் வைத்து கொலை செய்து பின்னர் உடலை துவரிமான் பகுதியில் வீசி சென்றது தெரியவந்தது நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

கொலைக்கு முக்கிய காரணம் கள்ளக் காதல் என்று தெரியவந்தது. இதனால் இரு கோஷ்டியை சேர்ந்தவர்களும் சாக்ரடீஸை கொலை செய்ய முயன்றதாக தெரிகிறது.விசாரிக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!