காஞ்சிரங்குடி ஊராட்சியில் அரசு சார்பாக இலவச கொசு வலை வழங்கல்..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி ஊராட்சியில் அரசு இலவச கொசு வலை ஊராட்சி மன்ற தலைவர் A.முனியசாமி மற்றும் ஊராட்சி மன்ற துணை தலைவர் திருமதிY.பரிக்கா தலைமையில் திருப்புல்லாணி கிழக்கு மாவட்ட கவுன்சிலர் K.ஆதித்தன் மற்றும் காஞ்சிரங்குடி ஒன்றிய கவுன்சிலர் R.கோவிந்தமூர்த்தி திருப்புல்லாணி ஒன்றிய கவுன்சிலர் திருமதி. சிவகலாராணி சிவசுப்பிரமணியன் வட்டார சுகாதாரத்துறை அலுவலர் டாக்டர் செய்யது ராசிக்தீன் முன்னிலையில் இலவச கொசு வலை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் 1வது வார்டு உறுப்பினர்  P.முருகேஸ்வரி, 2வது வார்டு உறுப்பினர் விஜயகுமார்,  3வது வார்டு உறுப்பினர் S.P.முகம்மது அபுதர், 4வது வார்டு உறுப்பினர் K.சிவகாமி,  5வார்டு உறுப்பினர் பாக்கியராஜ்,  7வது வார்டு உறுப்பினர் சேகு சின்னத்தம்பி, 8வது வார்டு உறுப்பினர் M.தமிழ்இலக்கியா,  9வது வார்டு உறுப்பினர் N.இந்திரா, ஊராட்சி செயலர் அமுதா ஆகியோர் கலந்துகொண்டனர்

கீழை நியூஸ் SKV முகம்மது சுஐபு

புனித ரமலான் வாழ்த்துக்கள்..