மதுரை மாவட்டம் சோழவந்தாணை சேர்ந்த லதா 24 பெயர் மாற்றப்பட்டுள்ளது இவருக்கும் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் கிராமத்தைச் சேர்ந்த ஹரிஹரன் மகன் ராஜமுருகன் 30 என்பவருக்கும் 2018 ஆம் ஆண்டு திருமணம் நடந்ததுள்ளது.
இவர்களுக்கு திருமணம் நடந்ததில் இருந்து லதாவை ராஜமுருகன் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதுகுறித்த 2019ஆம் ஆண்டு ராஜமுருகன் மீது வரதட்சணை மற்றும் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ராஜாமுருகன் லதாவை ஆபாசமாக சித்தரித்து முகநூல் மற்றும் வலைதளங்களில் வெளியிட்டு லதா பெற்றோருக்கும் அனுப்பி உள்ளார்.
இதுகுறித்து சோழவந்தான் காவல் நிலையத்தில் லதா புகார் கொடுத்ததின் பேரில் இன்ஸ்பெக்டர் வசந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில் ராஜமுருகன் மார்த்தாண்டத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து பேரில் போலீசார் அங்குள்ள போலீஸ் உதவியுடன் ராஜ முருகனை தப்பியோட முயற்சித்த போது கைது செய்தனர்.
பின்பு கைது செய்யப்பட்ட ராஜமுருகனை வாடிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை சிறைச்சாலையில் அடைத்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.