7
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டார்.அதை தொடர்ந்து தென்காசி மாவட்டம் சுரண்டை அண்ணா சிலை அருகில் சுரண்டை நகர செயலாளர் வி. கே.எஸ். சக்திவேல் தலைமையில் அதிமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடினர்.இந்த நிகழ்ச்சியில் அதிமுக புறநகர் மாவட்ட அவைத்தலைவர் எம் வீரபாண்டியன், ஜவஹர் தங்கம், கோபால், ஏடி மூர்த்தி, கோட்டூர்சாமி பாண்டியன், முருகையா, குத்தாலிங்கம், முன்னாள் கவுன்சிலர்கள் சங்கர், பழனிச்சாமி, சுடலைமுத்து கண்ணன், கீழச்சுரண்டை ராஜேஸ், வெள்ளைத்துரை, செல்வம், ராமசாமி, மாரிக்குமார், ஆறுமுகம், மூவே சந்திரன், வெள்ளைச்சாமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.