மதுரை மாவட்டத்தில் சாரல் மழை

மதுரை மாவட்டத்தில் பல பகுதிகளில் வியாழக்கிழமை காலை முதல் மழை பெய்து வருகிறது.மதுரை புறநகரில் சோழவந்தான், பரவை, விளாங்குடி, ஊமச்சிகுளம், அலங்காநல்லூர், அழகர்கோவில், மேலூர், திருமங்கலம், மதுரை நகரில் திருப்பாலை, புதூர், அண்ணாநகர், வண்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் விடிய, விடிய பலத்த மழை பெய்து வருகிறது.மதுரை மேலமடை சௌபாக்யா விநாயகர் ஆலய தெருவில் சாக்கடை நீர் பெருக்கெடுத்து சாலையில் ஓடியது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..