புளியங்குடியில் காவல் நிலைய சரகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்.தென்காசி மாவட்டம்,புளியங்குடி காவல் நிலைய சரக எல்லைக்குள் குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு காவல் துறையினரின் மூன்றாம் கண் என அழைக்கப்படும் 25 கண்காணிப்பு கேமராக்களை(CCTV) புளியங்குடி பாலாஜி கிரானைட் உரிமையாளர் நாரயணன் அமைத்து கொடுத்தார். புளியங்குடி காமராஜர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் IPS கண்காணிப்பு கேமிராக்களின் இயக்கத்தை துவங்கி வைத்தார்.இதில் புளியங்குடி துணை கண்காணிப்பாளர் சுவாமி நாதன்,காவல் ஆய்வாளர் அலெஸ் மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நபர்களுக்கு கண்காணிப்பு கேமிராக்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.