இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை இயக்கம் சார்பாக அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி் விழா கொண்டாட்டம்

மக்கள் பாதையின் வழிகாட்டி நேர்மையாளர்  மக்கள் பாதை இயக்கம் சார்பாக காந்தி ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்பட்டது.

மக்கள் பாதையின் திண்ணை திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஒவியப் போட்டி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு காந்தி அவர்களின் திருவுருவப்படத்தை ஓவியமாக வரைந்தனர்.மேலும் காந்த போல் வேடமணிந்து பள்ளி மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

நிகழ்வில் கலையனூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் தீன தயாளன், நிவாஷ், ஹரிஷ், சந்துரு, ஜவகர் பாபு, ஜெகன், கண்மணி, ஜெயஸ்ரீ, அபிதா, சுபஸ்ரீ, அனுஸ்ரீ ஆகியோரை மக்கள் பாதை மாவட்ட பொறுப்பாளர்கள் வாழ்த்தினார்கள்.இராமநாதபுரம் மாவட்ட மகளிரணி துணை ஒருங்கிணைப்பாளர் பார்கவி, திண்ணை பள்ளி ஆசிரியைகள் பிரீத்தி, மற்றும் பா,சிவராஜ், ஒன்றிய தாய்மண் திட்ட பொறுப்பாளர் குருநாதன் ஆகியோர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..