SDTU தொழிற் சங்கம் சார்பில் இராமநாதபுரம் சந்தை திடலில் நேற்று 26/09/2020 பொது மக்களுக்கு கபசூராகுடிநீர் மற்றும் முககவசம் மாநில தலைவர் முஹம்மது பாரூக் பொது மக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்வின் போது மாவட்டதுணை செயலாளர் காதர்கனி ஏற்பாடு செய்து இருந்தார். அதனை தொடர்ந்து ஆட்டோ டிரைவர்களுக்கு தொழிற் சங்ககார்டு வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து மாவட்ட தலைவர் முஸ்தாக் அஹமது இல்லத்திற்கு சென்று மனமக்களை வாழ்த்தி மணமகனுக்கு மாநில தலைவர் முஹம்மது முபாரக் பொன்னாடை போர்த்திகவுரவவித்தார். அதனை தொடர்ந்து SDPI கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் வஹாப் உடல் நலம் குறித்து விசாரித்தார்.
இந்நிகழ்வில் SDPI கட்சியின் மாவட்ட தலைவர் நூர்ஜியாவுதீன், முன்னாள் மாவட்ட தலைவர் வாஹாப், தொகுதி தலைவர் ஜெமீல், நகர் தலைவர் நஜீம் SDTU மாவட்ட தலைவர் முஸ்தாக்அஹமது, மாவட்ட செயலாளர் பீர்முஹைதீன் மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான் மாவட்டதுணை செயலாளர் காதர்கனி, சின்ன தம்பி, கீழைஅஸ்ரப் மற்றும் நகர் கிளைகளின் நிர்வாகிகளும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.