மத்திய மோடி அரசின் வேளாண்மை விரோத சட்டங்களானஅத்தியாவசியப் பொருட்கள் திருத்தச்சட்டம்விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்த விவசாய சட்டம்விவசாயிகளின் விலை பொருட்கள் உத்தரவாத சட்டம்ஆகிய மூன்று சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சி மதுரை மாவட்டத்தின் சார்பில் மதுரை கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு சட்ட மசோதா நகலை எரித்து மதுரை மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் விவசாயிகளுக்கு ஆதரவாக பச்சை தளைப்பாகையுடன் போரட்டத்தில் ஈடுபட்டனர்..மாவட்ட நிர்வாகிகள் தொகுதி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்… மேலும் போராட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் சாகுல் ஹமீது துணை தலைவர் சுப்பிரமணியன் மாவட்ட செயலாளர்கள் கமால் பாஷா சிக்கந்தர் மாவட்ட பொருளாளர் வழ யூசுப் பாப்புலர் ஃப்ரண்ட ஆஃப் இந்தியா மதுரை மாவட்ட தலைவர் அபுதாகிர் ஆகியோர் கலந்துகொண்டனர்…
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.