காய்கறி மார்க்கெட் நேரத்தை மாற்றித் தரவேண்டும்: சென்ட்ரல் மார்க்கெட் அண்ணா மாத வாடகை வியாபாரிகள் சங்க கோரிக்கை:

மதுரை மாட்டுத் தாவணி காய்கறி மார்க்கெட்டில் விற்பனை நேரமானது, இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை வழங்கப்பட்டுள்ளது.ஆனால், அதிகாலை 5 மணிக்கு மேல் தான் வியாபாரம் நடைபெறுகிறது. ஆகவே, கொரோனா காலத்துக்கு முன்பு இருந்த நேரத்தை ஒதுக்கித் தரவேண்டும். மேலும், 112 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால், கடையின் உள்ளே பில் புக், தராசு ஆகியவை உள்ளதாலும் வியாபாரத்தை தொடர முடியவில்லை.ஆகவே, இது குறித்து வியாபாரிகளுக்கு உதவ வேண்டுமென, சங்கத் தலைவர் செல்லத்துரை, செயலர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் காமராஜ், ஆலோசகர் முருகன் ஆகியோர், மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய்யிடம் மனுவை அளித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..