9
மதுரை மாட்டுத் தாவணி பகுதிகளில் பூ விற்கும் 20..க்கு மேற்பட்டோர் கூட்டமாக வந்து, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை அடங்கிய மனுவை அளித்தனர்.பூ மார்க்கெட் பகுதிகளில் பிளாட்பாரங்களில் பூ விற்பணை செய்வோரை, மதுரை மாநகராட்சி அதிகாரிகள், பூக்களை பறித்து செல்வதுடன், வியாபாரம் செய்யக் கூடாது என, தொல்லை கொடுப்பதாக, சாலையோர பூ வியாபாரிகளான ரேணுகா, மகாலட்சுமி மற்றும் 20..க்கு மேற்பட்டோர் கையெழுத்திட்டு மனுவை அளித்தனர்.இது குறித்து சாலையோர பூ வியாபாரம் செய்யும் பெண்கள் கூறியது:இந்த பூ வியாபாரம் மூலம் தான் குடும்பத்தை நடத்தி வருவதாகவும், கொரோனா காலம் என்பதால் மிகவும் கஷ்டப்படுவதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல், மாட்டுத்தாவணி பகுதிகளில் பிளாட்பாரங்களில் பூ விற்பணை செய்ய அனுமதிக்க கோரிக்கை விடுத்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.