சோழவந்தானில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் ஜிஎஸ்டி இழப்பீடு தொகை வழங்க வேண்டும் கொரோனா காலத்தில் கொண்டு வந்த அவசர சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் வங்கிக்கடன் வசூலை ஓராண்டு நிறுத்தி வைக்க வேண்டும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது 100 நாள் வேலையை பேரூராட்சி பகுதியில் விரிவுபடுத்த வேண்டும் தொழிலாளர் விரோத போக்கை கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து சோழவந்தான் மாரியம்மன் சன்னதியில் சிபிஎம் சிபிஐ சிபிஐ எம்எல் லிபெரேஷன் உள்ளிட்ட கட்சிகள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது சிபிஎம் ஒன்றிய செயலாளர் வேல்பாண்டி தலைமை தாங்கினார் சிபிஐ ஒன்றிய செயலாளர் மூர்த்தி முன்னிலை வகித்தார் மதுக்கூர் ராமலிங்கம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து விளக்க உரையாற்றினார் நகரச் செயலாளர் கந்தவேல் நன்றி கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..