கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் அனைத்து கட்சி பூத் முகவர்கள் கூட்டம்…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் வீர ராஜா தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி கூட்டம் இன்று 18.9.2020 தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.

கீழக்கரை தாலுகாவிற்கு உட்பட்ட அனைத்து வாக்கு சாவடி மையங்களில் சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்கு சாவடி நிலையை முகவர்களின் பெயர் முகவரி மற்றும் கட்சியின் பெயர் போன்ற விவரங்களை சேகரித்து அனுப்புமாறு கோரப்பட்டது.

இதில் கீழக்கரை திமுக நகர் செயலாளர் SAH பஷீர் அஹமது மற்றும் இளைஞர் அணி பொறுப்பாளர். வழக்கறிஞர் V.S ஹமீது சுல்தான், மாவட்ட பிரதிநிதி மரைக்காயர் திருப்புல்லாணி ஒன்றிய சேர்மன் புல்லாணி , அ.தி.மு.க சார்பில் நகர் செயலாளர் ஜகுபர் உசேன், காங்கிரஸ் கட்சி சார்பில் ஹாமீதுகான் தே.மு.தி.க சார்பில் நகரச் செயலாளர் சதக்கத்துல்லா, மேகவர்ணம், மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.

கீழை நியூஸ் S.K.V முகம்மது சுஐபு

புனித ரமலான் வாழ்த்துக்கள்..