முகக்கவசம் அணியாதவர்களுக்கு கீழக்கரை நகராட்சி அதிகாரிகள் அபராதம்…

தமிழகத்தில் கொரோணா கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் நிலையில் தமிழக அரசு ஊரடங்கால் கட்டுபாடுடன் சில  தளர்வுகளை அறிவித்துள்ளது.  இதில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுபடுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு முயற்சிகளையும் எடுத்துவருகிறது. இதில்  குறிப்பாக அனைவரும் முகக்கவசம், சமூக இடைவெளி ஆகியவை கட்டாயம் பின்பற்ற. வேண்டுமென்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் இன்று 14.9.2020 இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி சுகாதார ஆய்வாளர் பூபதி , தலைமையில் துப்புரவு மேற்பார்வையாளர் சக்தி, உதவியாளர் பாலா, ஆகியோர் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் வசூல் செய்தார்கள்.

கீழை நியூஸ் S.K.V முகம்து சுஐபு

புனித ரமலான் வாழ்த்துக்கள்..