3
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சிந்தாமணி பகுதியில் கிருதுமால் நதி செல்கிறது .இங்கு ராஜமான்நகர், கண்ணன் காலனி, சிந்தாமணி ஆகிய பகுதிகளில் சுமார் இரண்டரை கிலோ மீட்டர் நீளம் அளவிற்கு கால்வாயில் கோரை புட்கள், குப்பைகள் சேர்ந்துமேடா உள்ளது.மேடான பகுதியாக மாறியதால் மழைக்காலங்களில் மழைநீர் அருகில் உள்ள குடியிருப்பு மற்றும் தொழிற்சாலை பகுதியில் சென்று பெரும் சேதத்தை ஏற்படுகிறது.இது தொடர்பாக இப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் குண்டாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள். மற்றும் மாநகராட்சி ஆணையரிடம் புகார் அளித்தனர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் விவசாயிகள், பொதுமக்கள் பெரும் அவதிகுள்ளாகின்றனர்.
You must be logged in to post a comment.