ராமநாதபுரம் எஸ்பி பொறுப்பேற்பு

ராமநாதபுரம் எஸ்பி., யாக இருந்த வீ.வருண்குமார் நேற்று முன் தினம் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இவருக்கு  பதிலாக நியமிக்கப்பட்ட சென்னை பூக்கடை காவல் துணை ஆணையர் கார்த்திக், ராமநாதபுரம் எஸ்பி., யாக இன்று (05.09.2020) பொறுப்பேற்று கொண்டார். அவர் கூறியதாவது: குளச்சலில் உதவி எஸ்பி., யாக பணியில் சேர்ந்தேன். மதுரை நகர், சென்னை பூக்கடை துணை ஆணையராக பணியாற்றி விட்டு ராமநாதபுரம் எஸ்பி., யாக இன்று பொறுப்பேற்றேன். சட்டம், ஒழுங்கு காக்கப்படும். பணி நேரத்தில் என்னை சந்தித்து மக்கள் புகார் மனு அளிக்கலாம். கஞ்சா விற்பனையை தடுக்க கஞ்சா வியாபாரிகளின் சொத்துகள், தண்டனை பெற்ற பின்னரும கஞ்சா விற்பதை மீண்டும் தொடர்ந்தால் அவர்களது உறவினர்களின் சொத்துகளை முடக்கவும் சட்டத்தில் உள்ள வழிமுறைகள் செயல்படுத்தப்படும் என்றார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..