7
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டாட்சியராக இருந்தவர் முரளிக்குமார் (53) இவர் கோவிட் – 19 தடுப்பு பணியில் ஈடுப்பட்டு இருந்த போது தொற்று உறுதியாகி வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்து பின்பு அதிலிருந்து மீண்டு வீட்டுக்கு வந்தார்.நேற்று வீட்டில் இருந்த போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது.உடனடியாக அவரை வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார் அவரின் மறைவுக்கு வருவாய் துறையினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
You must be logged in to post a comment.