திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியார் பள்ளிகள் 100 சதவீதம் கல்வி கட்டணம் வசூலித்தால் பெற்றோர்கள் புகார் தெரிவிக்கலாம் என்றார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள் செல்வம் தெரிவித்துள்ளார்.சென்னை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பள்ளிகளில் 2020 – 2020ம் கல்வி ஆண்டில் தற்போது 40 சதவீதம் கல்வி கட்டணம் மட்டுமே மாணவ மாணவிகளிடம் இருந்து பெற வேண்டும் .மீறி கட்டணம் செலுத்த பெற்றோர்களை கட்டாயப் படுத்தினால் அது கோர்ட் அவமதிப்பாகும். அத்துடன் 100 சதவீதம் கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தும் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி தனியார் சுயநிதி பள்ளிகள் மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் சி பி எஸ் இ பள்ளிகள் குறித்த புகார்களை மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் பெற்றோர்கள் தெரிவிக்கலாம் இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள்செல்வம் தெரிவித்துள்ளார்
செய்தியாளர் செங்கம் சரவணகுமார்
You must be logged in to post a comment.