நெல்லை மாவட்டம் மானூர் அருகே சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் படி அனைத்து காவல் நிலையங்களிலும் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மானூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாடசாமி (02.09.20) நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வடக்கு செழியநல்லூர் அருகே உள்ள மேல இலந்தைகுளம் ஓடையில் மணல் திருட்டில் ஈடுபட்ட வடக்கு செழியநல்லூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த முருகன்(36), தூர்க்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பூல்பாண்டி(32) ஆகியோரை காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.மேலும் திருநல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.